சென்னை: மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலில் சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு வீதிகளின் வழியாக சென்ற தேர், காலை நிலைக்கு வந்து சேர்ந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று காலையில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.