சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் கயர்குத்து விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்



சிவகாசி; சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் கயர் குத்து திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகாசி பத்ரகாளியம்மமன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் , வாகனம், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம் , வேதாள வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்நிலையில் நேற்று கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக 9 ம் நாள் திருவிழாவான இன்று கயர்குத்து திருவிழா நடந்துது. பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியும், தீச்சட்டி எடுத்து , உருண்டு கொடுத்து , மாவிளக்கு எடுத்து, கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் திருவீதி வலம் வந்து தேர் அலங்காரம் காணுதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை தேரோட்டம் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பட்டாசு உள்ளிட்ட ஆலைகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆங்காங்கே பலர் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கினர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்