திருப்பத்துார்; திருப்பத்துார் அருகே, தமிழக – ஆந்திர எல்லையான புல்லுார் தடுப்பணையில், 3 அடி உயர அம்மன் சிலையை, சிறுவர்கள் கண்டெடுத்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான புல்லுார் தடுப்பணையில் கடந்த, 2 ஆண்டுகளாக நீர் நிரம்பியிருந்த நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், அணையில் நீர் வற்றி, தற்போது சிறிய குட்டைபோல் காட்சி அளிக்கிறது. இந்த அணையில் நேற்று, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குதித்து விளையாடினர். அப்போது, 3 அடி உயர அம்மன் கற்சிலை ஒன்று இருப்பதை கண்டு மீட்டனர். ஆந்திர மாநில குப்பம் போலீசார், அம்மன் சிலையை மீட்டு விசாரித்து வருகின்றனர்.