அட்சய திருதியை; ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் சிறப்பு அபிஷேகம்



கோவை; அட்சய திருதியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில்  துர்கா - லட்சுமி - சரஸ்வதிக்கு அபிஷேகம் நடந்தது.

கோவை: அட்சய திருதியை விரதத்தை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. துர்கை, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து, பிரசாதம் வழங்குதல், சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மன்களை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்