சபரிமலையில் ஜன.16 முதல் 4 நாட்கள் படிபூஜை

ஜனவரி 09,2018



சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு பின்னர் ஜன.16 முதல் 19 வரை நான்கு நாட்கள் படிபூஜை நடைபெறும். 19-ல் மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடத்தப்பட்டு 20ம் தேதி காலை நடை அடைக்கப்படும்.சபரிமலையில் வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை திருவாபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தி முடிந்த சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி மூன்று முறை காட்சி தரும்.

இதற்கு பின்னர் தினமும் இரவு 7:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் வாகனத்தில் சன்னி தானத்துக்கு எழுந்தருளுவார்.16ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 18-ம் தேதி காலை 11:00 மணியுடன் நெய் அபிஷேகம் நிறைவு பெறும். அன்று மதியம் உச்சபூஜைக்கு முன்னதாக களபாபிஷேகம் நடைபெறும்.19-ம் தேதி இரவு 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் நடத்தலாம். அதன் பின்னர் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. அன்று இரவு 11:00 மணிக்கு மாளிகைப்புறத்தில் குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி தரிசனம் முடித்ததும் நடை அடைக்கப்படும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்