SS
சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உலகின் ஆதியே ஊழி அந்தமேஅலைகள் ஆர்த்திடும் ஆழிச் சங்கமேமலைகள் போர்த்திய மாரிப் பந்தலேகலைகள் வீரமா காளி அம்மனே!பெருமை ஊட்டுவாய் பீடு நாட்டுவாய்அருமை வாழ்வினை ஆண்டு காட்டுவாய்திருவின் வானமே தெற்கின் காவலேகருணை வீரமா காளி அம்மனே!புவியின் அன்னையே பூவின் மென்மையேஅவியும் வேள்வியின் ஆற்றல் வன்மையேரவியும் திங்களும் சேர்ந்து தீட்டியகவிதை வீரமா காளி அம்மனே!அருவி போல்வரம் ஆறு போலருள்உருவில் பேரலை ஊற்றில் ரௌத்திரம்பெருகும் மாமழை பேணி வாழ்ந்திடக்கருவி வீரமா காளி அம்மனே!அழகுப் பூவனம் ஆதி ஐந்தினைஉழவின் மண்மணம் ஊறும் சிந்தனைபழகும் பல்கலை பாவை செம்மொழிக்கழகம் வீரமா காளி அம்மனே!பவள வேல்விழி பால்வெண் பல்லணிபுவனம் காத்திடப் பொங்கும் போர்முகம்நவமும் தொன்மையும் நாடி நல்கிடும்கவசம் வீரமா காளி அம்மனே!வனமும் ஆழியும் வாழும் குன்றமும்புனமும் பாலையும் போற்றும் தாய்மையேதினமும் வேளையும் தேவை தீர்ப்பவள்கனகம் வீரமா காளி அம்மனே!பழகு நாடகம் பாடும் இன்னிசைஅழகுச் சொற்றொடர் ஆளும் செம்மொழிவிழவின் நாயகி வீரம் பூத்திடும்கழனி வீரமா காளி அம்மனே!சுடரின் வீதியாள் சோதி ஆதியாள்நடனப் போதியாள் நாட்டின் நாதியாள்உடலின் பாதியாள் ஊழின் மீதியாள்கடமை வீரமா காளி அம்மனே!இடியும் மின்னலும் ஏற்ற மாமழைபடியும் நன்செயில் பாடு ஏற்பவர்விடியும் காலையாய் வேர்வை நோற்பவர்கடவுள் வீரமா காளி அம்மனே!