SS வள்ளலார் பாடிய வைத்தியநாத பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வள்ளலார் பாடிய வைத்தியநாத பதிகம்
வள்ளலார் பாடிய வைத்தியநாத பதிகம்
வள்ளலார் பாடிய வைத்தியநாத பதிகம்

வாடிய பயிரைக் கண்டபோதே வாடிய வள்ளலார் ராமலிங்க அடிகள் நோயுற்ற மனிதர்தம் பிணிபோக்கிட வைத்தீஸ்வரன் கோயில் வைத்யநாத சுவாமியை வேண்டிப் பாடிய வைத்யநாத பதிகம் இது. இதனைச் சொல்வதால் நோய்கள் யாவும் நீங்கும். நலம் பெருகும்.

உண்டதே உணவுதான் கண்டதே காட்சி
இதை உற்றறிய மாட்டார்களாய்

உயிருண்டு பாவபுண்ணிய முண்டு
வினைகளுண்டுறு பிறவி உண்டு
துன்பத்

தொண்டதே செயுநரகவாதை உண்டு
இன்பமுறு சொர்க்க முண்டிவையும்
அன்றித்

தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று
சிலர்சொலும் துர்ப்புத்தியால் உலகிலே
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்தம்
கொங்கையும் வெறுத்துக்கையில்

கொண்டதீங் கனியை விட்டந்தரத்
தொருபழம் கொள்ளுவீர் என்பர் அந்த

வண்டர்வாயற ஒரு மருந்தருள்க
தவசிகாமணி உலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர் பவ ரோகமற
வளர் வைத்தியநாதனே.

படி அளவு சாம்பலைப் பூசியே சைவம்
பழுத்தபழமோ பூசுணைப்

பழமோ எனக்கருங்கல் போலும்
அசையாது பாழாகுகின்றார் களோர்

பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள்
அல்லதொரு பெண்ணை எனினுங்
கொள்கிலார்

பேய்கொண்டதோ அன்றி
நோய்கொண்டதோ பெரும் பித்தேற்றதோ
அறிகிலேன்

செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக்
கெல்லாம் தெரித்திடக் காட்டிநகைதான்

செய்து வளையாப்பெரும் செம்மரத்
துண்டுபோல் செம் மாப்பர்
அவர்வாய்மதம்

மடிஅளவதா ஒரு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்

மகிழுவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே.

பெண்கொண்ட சுகமதே கண்கண்ட
பலன்இது பிடிக்க அறியாது சிலர்தாம்

பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலேசுகம்
பெறவே விரும்பி வீணில்

பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே
நரம்பெலாம் பசைஅற்று மேல்எழும்பப்

பட்டினி கிடந்துசாகின்றார்கள் ஈதென்ன
பாவம் இவர் உண்மை அறியார்

கண்கொண்ட குருடரே என்று வாய்ப்
பல்எலாங் காட்டிச் சிரித்துநீண்ட

கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
கயவர்வாய் மத முழுதுமே

மண்கொண்டு போக ஓர் மருந்தருள்க
தவசிகா மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே.

பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
பேச்சிவை எலாம்வேதனாம்

பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
பெரும்புரட் டாகும் அல்லால்

ஓதை உறும் உலகா யதத்தினுள உண்மை
போல் ஒருசிறிதும் இல்லைஇல்லை

உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
உலர்ந்தீர்கள் இனியாகினும்

மேதை உணவாதி வேண்டுவ எலாம்
உண்டுநீர் விரைமலர்த் தொடை ஆதியா

வேண்டுவ எலாங்கொண்டு மேடை
மேல் பெண்களொடு விளையாடு
வீர்கள்என்பர்.

வாதை அவர் சார்பற மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத்தியநாதனே.

ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
எண்ணி நல்லோர்கள் ஒருபால்

இறைவ நின்தோத்திரம் இயம்பிஇரு
கண்நீர் இறைப்பஅது கண்டுநின்று

ஞானம் பழுத்துவிழியால் ஒழுகுகின்ற நீர்
நம் உலகில் ஒருவர் அலவே

ஞானிஇவர் யோனிவழி தோன்றியவரோ
என நகைப்பர் சும்மா அழுகிலோ

ஊனம் குழுத்த கண்ணாம் என்பர்
உலகத்தில் உயர்பெண்டு சாக்கொடுத்த
ஒருவன்

முகம் என்ன இவர் முகம்வாடுகின்றதென
உளறுவார் வாய்அடங்க

மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே.

மெய்யோர் - தினைத்தனையும்
அறிகிலார் பொய்க்கதை விளம்பஎனில்
இவ்வுலகிலோ

மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்
தெரு மேஷமண்ணெ னினும் உதவக்

கையோ மனத்தையும் விடுக்க இசை
யார்கள் கொலைகளவு கட் காமம்
முதலாக்

கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை
ஒரு கனவிலும் கண்டறிகிலார்

ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
அங்கைதாங் கங்கை என்னும்

ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்
அவ்வசுத்த நீங்காது கண்டாய்
மையோர் அணுத்துணையும் மேவுறாத்
தவசிகாமணி உலகநாத வள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர் வைத்தியநாதனே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar