SS புத்ர பாக்கியம் உண்டாக... - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> புத்ர பாக்கியம் உண்டாக...
புத்ர பாக்கியம் உண்டாக...
புத்ர பாக்கியம் உண்டாக...

குமாரம் முநிஸார்தூல மாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்
விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்
ஸதாபலம் ஜடாதரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

- ஸ்கந்தஷ்டக ஸ்தோத்திரம்

பொருள்: குமரக் கடவுளே, சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவாய்த் தோன்றுகிறவரே, நமஸ்காரம். வள்ளியின் மணாளரே; உலகங்கள் உருவாகக் காரணமானவரே; சிவ மைந்தா; ஸ்கந்தா; நமஸ்காரம். விசாக நட்சத்திரத்தில் உதித்தவரே; உலகிலுள்ள அனைவருக்கும் தெய்வமானவரே; கார்த்திகைப் பெண்களின் புத்திரனே; எப்போதும் குழந்தை வடிவில் அருள்பவரே; ஜடை தரித்தவேர; முருகப் பெருமானே நமஸ்காரம். கந்த சஷ்டி மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களில் இதை பாராயணம் செய்தால் பெருமான் அருளால் ஆரோக்கியம், புத்திர பாக்கியம் கிட்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar