SS அடியவர் வாழ்வில்.. - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அடியவர் வாழ்வில்..
அடியவர் வாழ்வில்..
அடியவர் வாழ்வில்..

அடியவர் வாழ்வில் ஆனந்தம் தருமே
பாண்டு ரங்கன் நாமம் - அவன்
அன்புடன் வாழும் பண்டரிபுரம் செல்ல
நாளும் நல்ல க்ஷேமம்    (அடி)

விட்டலன் நாமம் சாந்தியை தருமே
சதா சர்வ காலம் ஹரி
மாதவன் யாதவன் கண்ணனாய் நின்று
அருள்வான் பல காலம்    (அடி)

ஜெய்ஜெய் விட்டல் ஜெயஹரி விட்டல்
என்றே நாமம் கேட்கும் - அந்த
விட்டலன் நாமும் அனைவரும் சொல்ல
துயர்களை உடனே தீர்க்கும் (அடி)

செங்கல் மேலே ரங்கனின் காட்சி
பார்த்திட நாளும் அழகாகும் - அவன்
சேவடி பணிந்தால் போதும் நமக்கு
நடப்பது எல்லாம் நலமாகும் (அடி)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar