SS 12 ஆழ்வார்கள் வாழி திருநாமம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> 12 ஆழ்வார்கள் வாழி திருநாமம்
12 ஆழ்வார்கள் வாழி திருநாமம்
12 ஆழ்வார்கள் வாழி திருநாமம்

அப்பிள்ளை திருவாய் மலர்ந்தருளியது ...

தனியன்நேரிசை வெண்பா

அம்புவியிலாழ்வார் களாண்டாள் மதுரகவி
தம்பதிநாள்மாதந் தமிழத்தொகையை-நம்புவிக்கே
செப்புளாமின்றனமாய்ச் சேர்ந்த பெருவாழிசெய்த
அப்புளான்தாளே யரண்.

நூற்பயன் எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

மண்ணுலகத்துள்ளோர்கள் மகிழ்ந்துவாழ
மணவாளமாமுனி களருள் தன்னாலே
பண்ணருளிச் செயல்விளக்கம் வாழிநாமம்
பத்தியுடனிவ்வுலகிற்பயில் வார்கோட்போர்
விண்ணுலகத்தோர்களினுங் கீர்த்தியுற்று
விளங்கியிட மெய்ஞ்ஞான வாழ்வுபெற்றே
கண்ணனடியார்களுடன் கலந்துநாளுங்
காசினியிற்சதிராக வாழ்வர்தாமே.
வேதத்தினுண் பொருளைத் தமிழால் நாளும்
விளக்கிடப் பன்னிருவர்வந்து தோன்றும்
மாதத்தை யவரவர்களுதித்த நாளை
வாழ்பதியைக் கலைத்தொகையை மனத்தில்வைத்துப்
போதத்தைத்தரும் தமிழால் வாழிநாமம்
பூதலத்திற் பேசுகின்றே னிதனைக் கற்போர்
பாதத்தை யென்முடி மேலணியாப்பூண்டு
பன்னாளுங்கைகூப்பிக் பணிவேன்யானே.

நூல்

போதமிகும் பொய்கையார் பூதத்தார் வாழியே
புகழ் பேயார் மழிசையர்கோன் புத்தூரன் வாழியே
நாதமுனி தொழுங்குருகை நாவீரன் வாழியே
நர்பாணன் கொல்லிநகர் நாதனார் வாழியே
ஆதரிக்குந் தொண்டரடிப்பொடி தாள்கள் வாழியே
அருட்கலியன் மதுரகவி யாண்டாளும் வாழியே
ஏதமற்ற நாலாயிரப்பனுவல் வாழியே
இவருதித்த நாள் மாத மெழிற்பதியும் வாழியே.

பொய்கையாழ்வார்

1. செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தன் வாழியே
திருக்கச்சிமாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளிநூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க்கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே.

பூதத்தாழ்வார்

2. அன்பேத களிறுநூறு மருளினான் வாழியே
ஐப்பசியில விட்டத்தி லவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர்குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்லதிருக்கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகுசிந்தைதிரியிட்ட பிரான் வாழியே
எழில்ஞானச் சுடர்விளக்கேற்றினான் வாழியே
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே.

பேயாழ்வார்

3. திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்தவைப்பசியிற் சதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும்மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல் தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே யிடைகழியில் நின்றசெல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப்பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே.

திருமழிசையாழ்வார்

4. அன்புடனந்தாதிதொண்ணூற்றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகுதையில் மகத்திங்குதித்தான் வாழியே
எழிற்சந்த விருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பொன்னிப் பெருக்கெதிர்செல் முதிர்கவியோன் வாழியே
நன்புவி நாலாயிரத்தெழு நூறிருந்தான் வாழியே
நங்கள்பத்திசாரனிரு நற்பதங்கள் வாழியே

நம்மாழ்வார்

5. ஆனதிருவிருத்தம் நூறு மருளினான் வாழியே
ஆசிரியமேழு பாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதி யெண்பத்தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய்மொழியாயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே
வானணியும்மாமாடக் குருகைமன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர் கோனவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே.

குலசேகராழ்வார்

6. அஞ்சனமாமலைப் பிறவி யாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை யடைந்துய்த்தோன் வாழியே
வஞ்சி நகரந்தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்ப்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக்குடப் பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவர தமிராம கதையருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத்திருவடிகள் வாழியே.

பெரியாழ்வார்

7. நல்லதிருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றறு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய வானிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக்கொடுத்தாள் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்து மால்தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர்நகரத்தை விளங்கவைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே.

தொண்டரடிப்பொடியாழ்வார்

8. மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைநாள் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன் பதஞ்சும் செப்பினான் வாழியே
பண்டுதிருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள்கலவிதனை பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே.

திருப்பாணாழ்வார்

9. உம்பர்தொழும்மெய்ஞ்ஞானத் துறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்தபிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம் புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான்பத்து மருளினான் வாழியே
செம்பொனடி முடியளவுஞ் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே.

திருமங்கையாழ்வார்

10. கலந்ததிருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியிற் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தான் வாழியே
நாலைந்து மாறைந்தம் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழு கூற்றிருக்கையிரு மடலீந்தான் வாழியே
இம்மூன்றிலிரு நூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே.

மதுரகவியாழ்வார்

11. சித்திரையிற் சித்திரைதிருநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே
உத்தர கங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்க வுகந்துவந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம்பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழிவாழியே.

ஆண்டாள்

12. திருவாடிப்பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவைமுப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார்பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர்மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்றுநாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க்கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாருந்திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

ஸ்ரீஆண்டாள் வாழித்திருநாமம்

13. கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
ஜோதிமணிமாடம் தோன்றுமூர்-நீதியால்
நல்லபக்தர் வாழுமூர், நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்
பாவங்கள் தீர்க்கும் பரமனடிகாட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும்-கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar