Advertisement

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சுப நிகழ்ச்சி நடந்தேறும்

கடமை உணர்வு மிக்க கடக ராசி அன்பர்களே!
கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. சூரியன் இந்த மாதம் தனுசுவிற்கு சென்று நன்மை தருவார். மேலும் புதன் டிச.21ல் தனுசு ராசிக்கு சென்று நற்பலன் கொடுப்பார். உங்கள் ராசிக்கு 6 ல் உள்ள கேது, சனியால் உங்களுக்கு நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். பொன், பொருள் சேரும். முயற்சி வெற்றி பெறும். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர். சனியின் 10-ம் இடத்துப்பார்வையால் பொருளாதார வளம் பெருகும்.

நீண்ட நாளாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்குக்கு எந்த குறையும் வராது. புதனால் டிச.21க்கு பிறகு கணவன், மனைவி இடையே நிலவிய பிரச்னை மறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு உறவினரால் உதவி கிடைக்கும். புது மணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதி கிடைக்கும். வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். சிலர் பதவி உயர்வு காண்பர். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு லாபத்துக்கு குறை இருக்காது. வருமானம் அதிகரிக்கும். ஜன.7க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஆரோக்கியம் மேம்படும். செவ்வாயால் பயணத்தின் போது கவனம் தேவை. டிச.28க்கு பிறகு பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

சிறப்பான பலன்கள்:

* தொழிலதிபர்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். கடந்த கால தடைகள் விலகி முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.
* வியாபாரிகள் மறைமுகப் போட்டியில் இருந்து விடுபட்டு வியாபாரத்தில் முழு கவனத்தை செலுத்துவர். வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் திறமையால் நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். சிலர் புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.
* ஐ.டி.,துறையினருக்கு முயற்சியில் இருந்த தடைகள் மறையும். பதவி உயர்வு காண்பர். சக ஊழியர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* வக்கீல்கள் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக் கலாம். தற்போது மீண்டும் குடும்பத்துடன் இணைவர். எதிரி தொல்லை மறையும்.
* ஆசிரியர்கள் புதனால் நற்பலனை எதிர்நோக்கலாம். கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
* விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். கரும்பு, எள், பாசிப்பயறு, நெல், கோதுமை, கொள்ளு மூலம் வருமானம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

* சுமாரான பலன்கள்:

* தொழிலதிபர்கள் ஜன.7க்கு பிறகு குடும்ப பிரச்னையால் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் பளுவையும், அலைச்சலையும் சந்திப்பர். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்கள் மத்தியில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு
* மருத்துவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஜன.7க்கு பிறகு வேலையில் கூடுதல் கவனம் தேவை.
* அரசியல்வாதிகள் மனக் குழப்பத்திற்கு ஆளாக வாய்ப்பு உண்டு.
* பொதுநலசேவகர்கள் பிரதி பலன் எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியதிருக்கும்.
* கலைஞர்கள் பெண்கள் வகையில் தொல்லைக்கு ஆளாகலாம். சக பெண் கலைஞர்களிடம் சற்று ஒதுங்கி இருக்கவும்.
* விவசாயிகள் ஜன.7க்கு பிறகு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது.
* கல்லூரி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

* நல்ல நாள்:
டிச.19,20,26, 27,28,29, ஜன.4,5,6, 7,8,11,12,13

* கவன நாள் டிச.30,31, ஜன.1 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: சிவப்பு, கருப்பு

பரிகாரம்:
● வெள்ளிக்கிழமை நாக தேவதை வழிபாடு
● தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்
● செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்

Advertisement
 
Advertisement