Load Image
Advertisement

ரிஷபம் : சித்திரை ராசி பலன்

கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் நிதானித்து செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்ளும் சக்தி இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கும் மாதமாக இருக்கும். மாதத்தின் முற்பகுதியில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் பிற்பகுதியில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிக்கிறார். அதன் காரணமாக வேலைப்பளு அதிகரித்தாலும் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குழந்தை பாக்கியம், திருமண யோகம், சொத்து சேர்க்கை என நன்மை அதிகரிக்கும். சித்திரை 10 முதல் செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைவதால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் நிலவிய சங்கடங்கள் தீரும். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிப்பீர்கள். இதுவரை இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். சங்கடங்கள் நீங்கும். சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் சில சிரமங்கள் தோன்றும். செய்து வரும் தொழிலில் சங்கடங்கள் இருக்கும் என்றாலும் அதை சமாளிக்கும் சக்தியும் உங்களுக்கு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களின் கல்விக்கனவு நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஏப்.29

அதிர்ஷ்ட நாள்: ஏப்.15, 19, 24, 28, மே 1,6, 10
பரிகாரம்: வராகியம்மனை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.

ரோகிணி: கலைக்காரகன், அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன், மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு மற்றவர்களை வழிநடத்தும் திறமை எப்போதும் இருக்கும். நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி அடையும் வரை உழைத்துக் கொண்டிருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளையும் அடையும் மாதமாக இருக்கப் போகிறது. லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகு பகவானுடன் செவ்வாயும் இணைவதால் தைரியமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை அடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் குருபகவான் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரித்தாலும் குடும்பத்திலும், உங்கள் வாழ்விலும் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தம்பதியருக்குள் இருந்த சங்கடங்கள் விலகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சில நேரங்களில் உடலில் அசதி ஏற்பட்டாலும் உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். இளைஞர்கள் முன்னேற்றம் காண்பர். வெளிநாட்டு முயற்சிகள் யோகத்தை உண்டாக்கும். பெண்களுக்கு வழக்கத்தை விட இந்த மாதம் யோக மாதமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பிள்ளைகளால் நன்மை காண்பீர்கள். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: ஏப்.30, மே 1
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15, 20, 24, 29, மே 2, 6, 11
பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டால் சிரமங்கள் தீரும்.

மிருகசீரிடம் 1,2 ம் பாதம்: தைரிய பராக்கிரம காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்தவொரு செயலிலும் வேகத்துடன் விவேகமும் இருக்கும். அதனால் உங்கள் முயற்சிகள் எப்போதும் வெற்றியாகும். பிறக்கும் சித்திரை மாதத்தில் உங்கள் நட்சத்திர நாதனின் சஞ்சார நிலையால் குறைகள் எல்லாம் நீங்கும். விருப்பங்கள் நிறைவேறும் மாதமாக இருக்கும். வம்பு, வழக்குகள் என்ற நிலைகள் மாறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி நிறைவேறும். விரய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மாதத்தின் பிற்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அதன் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தின் காரணமாக நீண்ட துாரப் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவருடன் இணக்கமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுய தொழில் செய்யும் பெண்கள் எதிர்பார்த்த லாபத்தை காண்பர். அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவதால் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய முடியும். விவசாயிகளின் நிலை உயரும். பொருளாதார நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மே1, 2
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15, 18, 24, 27. மே. 6, 9
பரிகாரம்: குன்றில் குடியிருக்கும் முருகனை வழிபட குறைகள் விலகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement