Load Image
Advertisement

மிதுனம் : சித்திரை ராசி பலன்

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சாதுரியமும் நினைத்ததை சாதித்திடும் திறமையும் எப்போதும் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. ஆற்றல்காரகன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் தடைபட்ட முயற்சிகள் இப்போது லாபமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம், தொழில் சீராக இருக்கும். பணம் பலவழிகளிலும் வரும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்கள், சிறு தொழில் செய்து வருவோரின் நிலை உயரும். குருபகவான் மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தெய்வ அருள் உண்டாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் மேற்கல்வி முயற்சி வெற்றியளிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகளுக்கு விருப்பங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: மே 2.

அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,18,23,27, மே 5,9.
பரிகாரம்: பைரவரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

திருவாதிரை: வித்யாகாரகனான புதன், யோக, போக காரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எண்ணியதை அடைகின்ற சக்தி இயல்பாகவே இருக்கும். தேவையானதை சாதித்துக் கொள்ளக் கூடிய திறமை படைத்த உங்களுக்கு பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாக இருக்கப் போகிறது. குரு பகவான் மாதத்தின் முற்பகுதியில் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். செல்வாக்கை அதிகரிப்பார். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகளை அகற்றுவார். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். சட்டப் பிரச்னைகள் சாதகமாகும். வம்பு, வழக்குகளில் இருந்து வெளியில் வருவீர்கள். வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் ஆதாய மாதமாக இருக்கும். கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவானால் உங்கள் குறைகள் யாவும் தீரும். தைரியமுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். அனைத்திலும் லாபமான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் விருப்பம் நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு புதிய வேலை அமையும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாப நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். விவசாயிகள் விருப்பம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். மாணவர்களின் வெளிநாட்டுக் கனவு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: மே 2,3
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,22,23, மே 4,5,13
பரிகாரம்: துர்கையை வழிபட வாழ்க்கை வளமாகும்.

புனர்பூசம் 1,2,3 ம் பாதம்: ஞான, அறிவுக்காரகனான குரு, புத்திகாரகனான புதன் பகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றலும், விரும்பியதை அடையும் சக்தியும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்வில் சிறப்பான மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் மூன்றாம் அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் இல்லாமல் போகும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பட்டம், பதவி, பொறுப்பு என்று உங்களைத் தேடி வரும். அரசியல்வாதிகளின் எண்ணம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும். மாதம் முழுவதும் தொழில்காரகன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். குருபகவான் மாதத்தின் முற்பகுதியில் யோகத்தை வழங்கினாலும் பிற்பகுதியில் செலவுகளை அதிகரிப்பார். புதிய வாகனம், இடம் என்று வாங்க வைப்பார். பிள்ளைகளின் கல்வி, புதிய வீடு கட்டுதல் என்று செலவுகள் நீளும். பெண்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருப்பர். விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். சிலருக்கு புதிய பொறுப்பு, விரும்பிய இட மாற்றம் ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். திறமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பணியாளர்களின் நிலை உயரும். மாணவர்களின் விருப்பம் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: மே 3.4.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14, 21, 23, 30,மே 3,5,12.
பரிகாரம்: குருபகவானுக்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement