Advertisement

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பதவி உயர்வு!

வசீகரமாகப் பேசுவதில் வல்ல ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் 3-ம் இடத்திற்கு வருவதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். செவ்வாய்,சனி, கேது,சுக்கிரனால் நன்மை தொடர்ந்து கிடைக்கும். பண விரயம் ஆகாமல் சேமிப்பு அதிகரிக்கும். செயலில் வெற்றி உண்டாகும். நகை-ஆபரணம் வாங்கலாம். புதனால் பொன், பொருள் சேரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும் ஜூலை 23 க்கு பிறகு அரசு வகையில் பிரச்னை வரலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.8 க்கு அரசு வகையில் ஆதாயமும், சலுகையும் உண்டாகும்.

பணியாளர்கள் பணிச்சுமையும், அலைச்சலும் அதிகமாகும். சற்று முயற்சி எடுத்தால் கோரிக்கை நிறைவேறும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.ஆக. 8க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவர்.
எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது
இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மாத இறுதியில் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கலாம். பசு மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு

பெண்கள் மகிழ்ச்சியுன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். ஆன்மிக சிந்தனையுடன் திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: ஜூலை 17, 18, 22, 23, 26, 27, 28 ஆக. 3, 4, 5, 6, 12, 13, 14, 15

கவன நாள்: ஆக.7, 8

அதிர்ஷ்ட எண்: 6, 7 நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். சூரியனை வணங்கி வாருங்கள்.

Advertisement
 
Advertisement