Advertisement

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பணப்புழக்கம்!

நட்புக்கு முன்னுரிமை தரும் மகர ராசி அன்பர்களே!

குரு, கேது ஆகியோரால் நன்மை கிடைக்கும். ஜூலை 23 வரையிலும் ஆக. 8 க்கு பிறகும் புதன் நற்பலன் கொடுப்பார். எந்த ஒரு செயலையும் விரைந்து செய்து முடிப்பீர்கள். கையில் பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்திட ஆர்வம் காட்டுவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் ஜூலை 23 ல் இருந்து ஆக. 8 வரை தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. உறவினர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம் உடல்நிலை சுமாராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். ஆக. 8 க்கு பிறகு பெண்கள் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்கள் சிறப்பான பலனைக் காணலாம். முக்கிய கோரிக்கைகளை கேட்டுப் பெற்று கொள்ளவும். ஆக. 8க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காது. ஒப்பந்தம் பெற சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் நல்ல பணப் புழக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த பதவி கிடைக்காது.

விவசாயிகளுக்கு நற்பலன் உண்டாகும். வருமானம் கூடும். காலநடை வகையில் எதிர்பார்த்த ஆதாயம் காண முடியாது. புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க வேண்டும்.வழக்கு விவகாரம் சாதகமாக இருக்காது.

மாணவர்கள் கல்விக்கான சூழல் கிடைக்கப் பெறுவர். ஜூலை 23 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

பெண்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆக. 8 க்கு பிறகு முயற்சியில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.

நல்ல நாள்: ஜூலை 17, 18, 24, 25, 26, 27, 28, ஆகஸ்டு 3, 4, 5, 6, 9, 10, 11, 14, 15

கவன நாள்: ஜூலை 29, 30

அதிர்ஷ்ட எண்: 6,9 நிறம்: சிவப்பு, மஞ்சள்

வழிபாடு: முருகனை வழிபட்டு வாருங்கள். துர்க்கையை வணங்கி ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். சனி பகவானை வழிபட்டு காக்கைக்கு எள் சோறு போடுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

Advertisement
 
Advertisement