Advertisement

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) பெண்களால் நன்மை!

இனிமையுடன் பழகும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் கேது,சனி இரண்டாலும் சிறப்பான நன்மை உண்டாகும். சுக்கிரன் தற்போதுள்ள 4-ம் இடம் சிறப்பானது. செப்.26க்கு பிறகு செல்லும் 5-ம் இடமும் சிறப்பானதே. மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் செயல் நிறைவேற கடின முயற்சி தேவைப்படும். வக்ர நிலையிலுள்ள புதனால் அக். 7 வரை நன்மையான பலன் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும். சூரியனால் சிறு சிறு உபாதை ஏற்படலாம். செவ்வாயால் கணவன், மனைவி இடையே மனக் கசப்பு வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். பெண்களால் நன்மை உண்டாகும்.

தொழில், வியாபாரத் தில் காலநேரம் பார்க்காமல் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். பணியாளர்களுக்கு தடைபட்ட பணி, பதவி உயர்வு கிடைக்கும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு இதமாக அமையும்.

கலைஞர்கள் முன்னேறுவர். எதிர்பார்த்த புகழ் கிடைக்கும்.

அரசியல்வாதிகள், கடின முயற்சி எடுத்தால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். ஆசிரியர் அறிவுரையை ஏற்பது
நல்லது.

விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். குறைந்த முதலீட்டில் பயிர் செய்யுங்கள். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். விருப்பம் போல புத்தாடை அணிகலன் கிடைக்க பெறலாம்.

நல்ல நாள்: செப்.19, 20, 26, 27, 28, 29, 30, அக். 4, 5, 7, 8, 12, 13, 16, 17

கவன நாள்: அக். 1,2 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண் : 4,5 நிறம்: வெள்ளை, கருப்பு

வழிபாடு: காலையில் சூரியனை தரிசியுங்கள். புதனன்று குல தெய்வ வழிபாட்டோடு பசுவுக்குத் தழை போடுங்கள். நாக தேவதை வழிபாடும் நன்மையளிக்கும்.

Advertisement
 
Advertisement