Advertisement

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) வேலைப்பளு குறையும்!

சாமர்த்தியம் மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் நட்புக்கிரகமான புதன் ஜன. 28ல் வக்கிரம் அடைந்தும், கேது மாதம் முழுவதும், சுக்கிரன் ஜன. 23வரையும், செவ்வாய் பிப். 10 முதலும் நன்மை தருவார்கள். சூரியன் 9ல் இருப்பதால் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். ஜன. 23க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கூடும். ஜன. 29,30 பெண்களால் பணம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கை சிறப்பாக அமையும். போட்டியாளர் வகையில் தொல்லையும், மாதக்கடைசியில் வீண் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்கள் மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் பொல்லாப்பை சந்திக்கலாம். வேலைப்பளு குறைவால்
நிம்மதியாக இருக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்துசேரும். அரசியல்வாதிகள் மாதக்கடைசியில் முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வர்.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும். மாதக் கடைசியில் புதிய சொத்து வாங்கும் நிலை உருவாகலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் நிதி நிலைமையில் வளர்ச்சியடைவர். கணவருடன் இணக்கமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஜன. 16,17 மகிழ்ச்சியாக அமையும். குடும்ப சுகம் மேம்படும். விருந்து-விழா என சென்று வரலாம். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். சிறு பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரைச் சந்தித்து விடுவது நல்லது.

நல்ல நாள்: ஜன. 15, 16, 17, 23, 24, 25, 26, 29, 30, பிப். 3, 4, 10, 11, 12.

கவன நாள்: ஜனவரி 18, 19 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5, 7 நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்தியையும், செவ்வாய்,வெள்ளியில் சிவ பார்வதியையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்.

Advertisement
 
Advertisement