Advertisement

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பணப்புழக்கம்!

சனி பகவானை ஆட்சி நாயகனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே!

சனியும்,கேதுவும் தொடர்ந்து சாதகமாக இருக்கிறார்கள். அதோடு சுக்கிரன் ஆக. 24 வரையும், புதன் ஆக. 21வரையும்,செப். 16க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார்கள். பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் புதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். கடும் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். ஆக. 27,28ல் எதிர்பாராத பணவரவு இருக்கும்.

பணியாளர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். மேல் அதிகாரிகள் ஆதரவு இருக்கும். வேலைப்பளு குறையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆனந்தமும் இருக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை காணலாம். பொருளாதார வளத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல மதிப்பெண் கிடைக்க பெறுவீர்கள்.

விவசாயிகள் கடும் உழைப்பின் பேரில் வருமானம் கிடைக்க பெறுவர். நெல், கேழ்வரகு, சோளம்,
மஞ்சள், காய்கறிகள், கீரை பயிர்கள் நல்ல மகசூல் தரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையாக நடந்து கொள்வர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

நல்ல நாள்: ஆக. 20, 21, 22, 23, 24, 27, 28, 31 செப். 1, 9, 10, 16, 17.

கவன நாள்: செப். 11, 12, 13 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 6,8 நிறம்: சிவப்பு, கருப்பு.

பரிகாரம்: நாகதேவதை,பெருமாளை வணங்கி வாருங்கள். முருகனை வழிபடுவது நல்லது.
செவ்வாய்க்கிழமை அம்மனை வணங்க வேண்டும்.

Advertisement
 
Advertisement