Advertisement

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)

மதிநுட்பத்துடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே! (விரைவில் சொத்து யோகம்)

சுக்கிரன் ஜூலை 8ல் கடகத்திற்கு மாறினாலும் நன்மை தருவார். உங்கள் ராசியில் இருக்கும் புதன் ஜூன் 20ல் மிதுனத்திற்கும், ஜூலை 6ல் கடகத்திற்கும் மாறுவதால் நன்மை உண்டாகாது. சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். புதிய முயற்சியை சிறப்பாக முடிக்கலாம். ஜூன் 19 க்கு பிறகு செவ்வாய் 6ல் இருப்பதால் நன்மை அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை, உறவினர் கருத்துவேறுபாடு முதலியன ஜூன் 20க்கு பிறகு மறையும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் கை கூடி வரும். ஜூலை 8க்கு பிறகு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்.

தொழிலதிபர், வியாபாரிகளுக்கு அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில்
இருப்பவர்கள் முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் வாழ்வில் மேம்பாடு அடைவர்.
விவசாயிகள் நல்ல வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஜூலை1க்குள் நிறைவேறும்.
மாணவர்களுக்கு சுமாரான நிலையே தொடரும். புதன் சாதகமாக இல்லாததால் விடாமுயற்சி தேவை.

பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். பிறந்த வீட்டினரின் ஆதரவு கிடைக்கும்.
நல்ல நாள்: ஜூன் 15,16,17,18,19,25,26, 27,28, ஜூலை 1,2,6,7,13,14,15
கவன நாள்: ஜூன் 20,21,22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7
நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்: ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். சனிக்கிழமை சனீஸ்வரரையும், வியாழனன்று தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள்.

Advertisement
 
Advertisement