Advertisement

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அனுகூல மாதம்

ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாய் மிகுந்த நற்பலனை கொடுப்பார். இதனால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். வீடு, வாகனம் வாங்கலாம். எல்லா வகையிலும் அனுகூலமான மாதம். மேலும் சனி, சுக்கிரன் தரும் பலன்களும் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குரு ஜன.16ல் 10ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளித்தர முடியாது. பொதுவாக 10ம் இடத்தில் இருக்கும் குருபகவான் தொழில் வகையில் பொருள்
நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குடும்பத்தில் பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். பெண்களின் ஒத்துழைப்பால் பொன், பொருள் சேரும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். சுக்கிரனால் ஜன.27க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் பிப்.3,4ல் சிலபிரச்னைகள் வரலாம். இந்நாட்களில் அவர்கள் வகையில் ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் ஜன.22,23,24ல் அவர்கள் மூலம் நன்மை நடக்கும். புதனால் ஜன.30க்கு பிறகு வீட்டில் சிற்சில பிரச்னை வரலாம். அப்போது கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

வியாபாரம் செவ்வாயால் ஜன.16ந் தேதிக்கு வரை பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அதன்பின் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். சுக்கிரனால் ஜன.27ந் தேதிக்கு வரை
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை மற்றும் வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். ஜன.25, 26,30,31ல் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். பிப்.7,8ல் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டியாளர்களை சமாளித்து வெற்றிகொள்ளும் ஆற்றல் இருக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற பலன் கிடைக்கும். ஜன.30க்கு பிறகு இடமாற்றத்தை சந்திக்கலாம். சிலருக்கு குருவால் பொருள் விரயம் ஏற்படலாம். ஆனால் சுக்கிரனால் பதவி உயர்வு உண்டு. ஜன.20,21ல் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தனியார்துறை மற்றும் காவல்துறையில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை பெறலாம். பெண்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு மறையும். தலைமையிடம் நல்ல பெயரையும். பொருளாதார வளத்தையும் பெறலாம்.
மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் இதற்குரிய பலன்கள் இப்போது இல்லாவிட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கும். ஜன.30க்கு பிறகு நண்பர்களால் அவப்பெயர் வரலாம். அவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும்.

விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக இருந்த தொய்வு நிலை மாறும். நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் . புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது. வழக்கு,
விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு அமைய வாய்ப்புண்டு.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். திருட்டு பயம் இனி இருக்காது. ஜன. 25,26ல் புத்தாடை, நகை வாங்கலாம். ஜன.30க்கு பிறகு அக்கம் பக்கத்தினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். ராகுவால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

நல்ல நாள்: ஜன. 14,20,21,22,23,24,27,28, 29, பிப். 1,2,7,8,9,10.

கவன நாள்: ஜன.15,16. பிப்.11,12 சந்திராஷ்டமம். இந்த காலத்தில் வீண்
விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: கருப்பு,வெள்ளை

பரிகாரம்: ராகு சாதகமற்ற நிலையில் உள்ளதால், காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு நீல நிற ஆடைகளைத் தானமாகக் கொடுங்கள். பைரவர் வழிபாடும் தடைகளை கடந்து உங்களை முன்னேற்றும்.

Advertisement
 
Advertisement