Advertisement

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) அரசு வகையில் நன்மை

லட்சிய நோக்குடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

ராசிக்கு 4ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன், புதனால் நன்மை அதிகரிக்கும். கேது ஏப்.11ல் சாதக இடமான ரிஷபத்திற்கு வருவதால் பக்தி எண்ணம் மேலோங்கும். முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் குறைவின்றி நிறைவேறும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மார்ச் 20,21,22ல் பெண்களால் நன்மை காணலாம். மார்ச் 15,16,17, ஏப் 12,13ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 27,28,29ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு விலகி இருக்கவும். ஏப்.11க்கு பிறகு ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கலாம். சிலருக்கு வீடு, மனை வாங்க யோகம் உண்டாகும். குடும்ப பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். செவ்வாயால் உடல்நலம் பாதிக்கப்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை. குறிப்பாக ஏப்.7,8ல் பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

தொழில், வியாபாரத்தில் அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். மார்ச் 18,19,23,24ல் சந்திரனால் சிறு தடைகள் ஏற்படலாம். ஏப்.1,2ல் அதிர்ஷ்டவசமாக பணவரவு கிடைக்கும். ஏப்.11க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பங்குதாரர்களுடன் இணக்கம் அதிகரிக்கும். தொழிலாளர் ஒத்துழைப்பால் பொருளாதார வளம் பெருகும். போட்டியாளர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை மறையும். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவதால் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். சிலர் பணி விஷயமாக அடிக்கடி பயணம் மேற்கொள்வர். ஏப்.11க்கு பிறகு ராணுவம் மற்றும் காவல்துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். மார்ச் 14, ஏப்.9,10,11 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். அரசியல் ரீதியான பயணம் வெற்றி பெறும். தொண்டர்களின் ஆதரவைப் பெற பணம் செலவழிக்க நேரிடும்.

மாணவர்களுக்கு நன்மையான காலமாக அமையும். கல்வி வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாகும். அக்கறையுடன் படித்து ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவர்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் கிடைக்கும்.

விவசாயிகள் முன்னேற்றமான பலன் காண்பர். எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு லாபம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் மெத்தன போக்கு வேண்டாம். ஏப். 11 க்கு பிறகு செவ்வாய் சாதகமாக காணப்படுவதால் புதிய சொத்து வாங்க யோகமுண்டு.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். விருந்து, விழா என சென்று மகிழ்வர். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுபவிஷயத்தில் நன்மை உண்டாகும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். அண்டைவீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை உண்டாகலாம். பொறுமை தேவை. ஏப்.11க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. மார்ச் 25,26ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஏப். 3,4 ல் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். சகோதரர் வகையில் பண உதவி கிடைக்கும்.

நல்ல நாள்: மார்ச் 14,15,16,17, 20,21,22,25, 26, ஏப். 1,2,3,4,9,10,11,12,13

கவன நாள்: ஏப். 5,6 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்: வெள்ளியன்று லட்சுமியை வழிபடுங்கள். ராகு காலத்தில் துர்க்கை, பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள். காக்கைக்கு அன்னமிடுவது நன்மையளிக்கும். ஆதரவற்றோருக்கு உதவி செய்யுங்கள். செவ்வாயன்று முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள்.

Advertisement
 
Advertisement