Advertisement

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1): வீடு வாங்க யோகம்

தங்கமனம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மைகளைத் தருவார். செவ்வாயால் பலன் கிடைக்க வாய்ப்பில்லை. குரு பல விதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். அவரது 7 மற்றும் 9ம் இட பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வீடு, -மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். புதனால் வீட்டில் இருந்த பிரச்னை,உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன நீங்கும். ஜன.22,23-ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஆனால் பிப்.6,7ல் அவர்கள் மூலம் நன்மை நடக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். கணவன், -மனைவி இடையே பாசம் மேலோங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். சனி ஏழரையாக ஜென்மத்தில் இருப்பதால், ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்க வேண்டும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சுக்கிரனால் அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். குரு சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை உருவாகாது. உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுடன் இருப்பர். சனி, போட்டியாளர்கள் வகையில் தொல்லை தருவார். ஜன.17,18,19, பிப்.8,9,10ல் பணம் விரயம் ஆகலாம். ஜன. 26,27,28-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மாத பிற்பகுதியில் சற்று சிரமம் இருக்கும்.
பணியாளர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு பாதிக்கப்படலாம். வேலையில் இருந்து வந்த அலைச்சல். பணிச்சுமை குறையும். பிப். 4,5-ல் எதிர்பாராத சலுகை கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். அலுவலக வகையில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பதவி உயர்வுக்காக போராடுபவர்கள் பிப்.6-க்கு பிறகு முயற்சி செய்தால் கிடைக்க வழியுண்டு.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும் சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம். கவனம். குரு சாதகமான இடத்தில் இருப்பதால், முயற்சிக்கேற்ப வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும்.

கலைஞர்களுக்கு சுக்கிர பலத்தால் நற்பெயரும் புகழும் உண்டாகும். அரசிடம் இருந்து விருது, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். விவசாயிகள் சொத்து வாங்கலாம். எள், பனை பொருள் மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு, விவகாரங்கள் இழுத்தடிக்கும். கைவிட்டு போன பொருட்கள் ஜன.19-க்குள் கிடைக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். பதவி தேடி வரும். பிப்.6-க்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஜன.20,21-ல் புத்தாடை, நகை வாங்கலாம். ஜன.29,30ல் விருந்து,விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பணவரவு இருக்கும். கண் தொடர்பான நோய் வரலாம். கவனம்.

* நல்ல நாள்: ஜன. 20,21,26,௨௭,௨௮,௨௯,30, பிப். 4,5,
* கவன நாள்: ஜன. 31 பிப். 1 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:
● ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் தீபம்.
● புதன் கிழமை குல தெய்வ தரிசனம்.
● வியாழனன்று ராகவேந்திரர் வழிபாடு.

Advertisement
 
Advertisement