Advertisement

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆதாயம்

வசீகர பேச்சால் பிறரைக் கவரும் கடக ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஆக. 2ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனைத் தருவார். தற்போது சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெற்று இருக்கிறீர்கள். உங்களின் ஆற்றல் மேம்படும். மேலும் சனியின் 10-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் செயலில் அனுகூலம், பொருளாதார வளம், தொழில் அபிவிருத்தி உண்டாகும்.

புதன் உங்கள் ராசியில் இருப்பதால் வீட்டில் அவ்வப்போது பிரச்னை ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சூரியனால் வீண் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கப்படலாம். குடும்பத்தில் சுக்கிரனால் மாத முற்பகுதியில் பொருளாதார வளம் பெருகும். அரசுவகையில் ஆதாயம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆக. 10,11 ஆகிய நாட்களில் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். ஆக. 6,7ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை20,21 ஆக.16ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. வேலையில் கூடுதல் கவனமுடன் இருக்கவும். பணிச்சுமையை சந்திக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உங்கள் உழைப்புக்கு ஏற்றபலன் கிடைக்காமல் போகாது. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்வது நல்லது. மேல் அதிகாரிகளிடம்
அனுசரித்து போகவும். சுக்கிரனால் அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகள் ஓரளவு நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஆக.2 க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு வரும். ஆக. 3,4,5 ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழிலதிபர், வியாபாரிகளுக்கு மாத முற்பகுதியில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதத்தை வைத்துக் கொள்ள வேண்டாம். ஜூலை 17, ஆக. 8,9,12,13ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஜூலை 25,26 ல் பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம். ஜூலை 22,23,24ல் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.

மாணவர்கள் சிரத்தையுடன் படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது நல்லது. விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்கள் மூலம் விளைச்சல் பெருகும். கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தூரத்து உறவினர்கள் வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஜூலை18,19, ஆக.14,15ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கப் பெறலாம். ஜூலை 27,28,29ல் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். ராகுவால் அக்கம்பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம்.

* நல்ல நாள்: ஜூலை18, 19,25,26,27,28,29, ஆக. 3,4,5,6,7,10,11,14,15
* கவன நாள்: ஜூலை 30,31 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: கருப்பு, வெள்ளை

பரிகாரம்:
● தினமும் காலையில் நீராடியதும் சூரியன் வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனை

Advertisement
 
Advertisement