Advertisement

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உறவினரால் நன்மை

கடமையில் கண்ணாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

புதன்,சனி, குரு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். இதனால் தடைகளை உடைத்தெறிந்து எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார்கள். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. சேமிக்கும் விதத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். குருபகவான் குடும்பத்தில் மகிழ்ச்சி தருவார். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கேது நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் சனிபகவானோடு இணைந்து நற்பலன் தருவார். பொன்னும், பொருளும் சேரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும். ராகு 12-ம் இடமான மிதுன ராசியில் இருப்பதால் வீண் விரயமும் ஏற்படலாம்.

குரு மார்ச்13ல் அதிசாரம் பெற்று 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். உடல்நலம் பாதிக்கலாம். மனதில் தளர்ச்சி ஏற்படலாம். குருவின் 9ம் இடத்துப் பார்வை மூலம் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம்.

குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். சகோதரிகளால் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். குறிப்பாக பிப்.17,18ல் அவர்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என குடும்பத்தினருடன் செல்வீர்கள். பிப்.13,14, மார்ச் 12,13,14ல் உறவினரால் நன்மை கிடைக்கும். செவ்வாயால் அக்கம்பக்கத்தினர் தொல்லை அவ்வப்போது வரலாம்.

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் புதனின் துணையோடு உயர்ந்த நிலையை எட்டிப் பிடிப்பர். வேலையில் திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள். அதிகாரிகள் உதவிகரமாக இருப்பர். சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். மார்ச் 10,11ல் எதிர்பாராத நன்மை கிடைக்க பெறலாம். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பிப்.28, மார்ச்1,2ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பிப்.15,16,19,20,21ல் சந்திரனால் தடைகள் வரலாம். பிப்.25க்கு பிறகு பாதுகாப்பு விஷயத்தில் கவனம் தேவை.

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் பிப்.25க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும். பிப்.26,27ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும். மார்ச் 13க்கு பிறகு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஆசிரியர், பெற்றோர் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றவும்.

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். பிப்.22,23ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். மார்ச் 3,4ல் விருந்து, விழா என செல்வீர்கள். ராகுவால் சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடலாம். செவ்வாயால் உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

* நல்ல நாள்: பிப்.13,14,17,18,22,23,28 மார்ச் 1,2,3,4,10,11,12,13,14
* கவன நாள்: மார்ச் 5,6,7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: நீலம், பச்சை

* பரிகாரம்:
* தினமும் காலையில் நீராடி சூரிய தரிசனம்
* சுவாதியன்று லட்சுமி நரசிம்மர் வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம்

Advertisement
 
Advertisement