Advertisement

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) போட்டியில் வெற்றி

பெற்றோர் மீது பாசமிக்க கன்னி ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் கூடுதல் நன்மை காணலாம். சுக்கிரன் மார்ச் 22 வரையிலும், புதன் ஏப்.8 வரையிலும் நற்பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்.

குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை பெரியோர்களிடம் ஒப்படையுங்கள் அது சிறப்பாக முடியும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தெய்வ அனுகூலத்தால் நன்மை கிடைக்கும். புதனால் புதிய முயற்சி வெற்றி அடையும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

ஏப்.6க்கு பிறகு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். மார்ச் 21,22ல் பெண்கள் மூலம் நன்மை கிடைக்கும். சகோதர வழியில் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். மார்ச்17,18, ஏப்.13ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 28,29ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மார்ச்15,16, ஏப்.11,12ல் எதிர்பாராத நற்பலன் கிடைக்கும். ஏப்.6க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும். வேலைப்பளுவும் இருக்கும்.

வியாபாரிகளுக்கு மறைமுகப் போட்டி, பகைவர் தொல்லை குறுக்கிடலாம். ஆனாலும் பண விஷயத்தில் பிற்போக்கான நிலை உருவாகாது. ஏப்.1,2ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். மார்ச் 19,20,23,24ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். சிலர் தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்கலாம் கவனம்.

கலைஞர்களுக்கு ஆடம்பர வசதிகள் பெருகும். சக கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பாராட்டு, புகழ் தானாக கிடைக்கும். மார்ச் 22க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் உண்டாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

மார்ச் 30,31ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். ஏப்.9ல் இருந்து அக்கறையுடன் படிப்பது நல்லது.

விவசாயிகளுக்கு உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவைக் குறையுங்கள். யாரையும் நம்பி காசை கொடுத்து விட வேண்டாம். எந்த வேலையும் உங்கள் நேரடி மேற்பார்வையில் நடப்பது நல்லது. மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.

ஏப்.8 வரை கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.
பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மார்ச் 25,26,27ல் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு. பிறந்த வீட்டாரின் உதவி கிடைக்கும். ஏப்.3,4,5 எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். சகோதரவழியில் நன்மை கிடைக்கும். ஏப்.8க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல்நிலை சுமாராக இருக்கும். மார்ச் 20க்கு பிறகு பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

* நல்ல நாள்: மார்ச் 15, 16, 17, 18, 21, 22, 25, 26, 27 ஏப்.1, 2, 3, 4, 5, 11, 12, 13
* கவன நாள்: ஏப். 6, 7, 8 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5, 9
* நிறம்:வெள்ளை, பச்சை

* பரிகாரம்:
* ஞாயிறன்று ராகு கால பைரவர் வழிபாடு
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி தரிசனம்
* செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அபிஷேகம்

Advertisement
 
Advertisement