Advertisement

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தொழிலில் அமோக லாபம்

ராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும். ஆனால் அவரது 9-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும். இதனால் மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சரணடையும் நிலை ஏற்படும். சுக்கிரன் ஜூன்4 வரை நன்மை கொடுப்பார் மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் நன்மையை எதிர்பார்க்க முடியாது.

குடும்பத்தில் சுக்கிரனால் பண வரவு இருக்கும். சொந்தபந்தங் களின் வருகை இருக்கும். மாதத் தொடக்கத்தில் குருவால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். மே28க்கு பிறகு புதனால் குடும்பத்தில் பிரச்னை வரலாம். அண்டைவீட்டார் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சிலருக்கு பணஇழப்பும் ஏற்படலாம். மே15, ஜூன் 11,12ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அதே நேரம் மே31, ஜூன்1ல் உறவினர்கள் வகையில் நன்மை கிடைக்கும். அவர்களால் முன்னேற்றம் காண்பீர்கள்.

ஜூன்5,6, ஜூன்14ல் பெண்களால் அனுகூலம் கிடைக்கும். சகோதரவழியில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு உயரும். அதிகாரி களின் கருணை பார்வை கிடைக்கும். மே 18க்கு பிறகு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாகும். சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். சூரியன் உங்கள் ராசிக்கு 12-ல் இருப்பதால் இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

மே29,30ல் உங்களின் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகளுக்கு மாதத் தொடக்கத்தில் குருபகவானால் வெற்றி கிடைக்கும். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும்.
மே18க்கு பிறகு எதிரிகளால் தொல்லை வரலாம்.முயற்சியில் தடைகள் வரலாம்.

மே19,20, ஜூன்15ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஜூன்2,3,4,7,8ல் சந்திரனால் பண விரயம் ஆகலாம். சிலருக்கு சூரியன் உங்கள் ராசிக்கு 12-ல் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படும். சனி, ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். கவனம் தேவை கலைஞர்கள் தொடர்ந்து ஸ்திர தன்மையில் இருப்பர். சுக்கிரனால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஜூன் 3க்கு பிறகு காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம்.அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மே16,17,18, ஜூன்13,14ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.

மே18க்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. கிழங்கு வகைகள், நிலக்கடலை, மஞ்சள், பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. கால்நடைகள் மூலம் வருவாய் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மே18க்குள் கைகூட வாய்ப்பு உண்டு. அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. ஜூன்9,10ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். மே 21,22,23ல் சிறப்பான பலன் கிடைக்கும். ராகுவால் உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம்.

* நல்ல நாள்: மே 19,20,21,22,23,29,30,31 ஜூன் 1,5,6,9,10,15
* கவன நாள்: மே 24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்: மஞ்சள், வெள்ளை

* பரிகாரம்:
● காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
● வெள்ளியன்று ராகுகால துர்கை வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்

Advertisement
 
Advertisement