Advertisement

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) உறவினரால் நன்மை

இந்த மாதம் 2ம் இடத்தில் இருக்கும் குருவின் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. இதனை கண்டு அஞ்ச வேண்டாம். காரணம் புதன் மே29 முதல் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். கேது, செவ்வாய், சுக்கிரன், சூரியன், சனி, ராகுவால் நற்பலன் கிடைக்காது.

மாத தொடக்கத்தில் குருவால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். தேவையான வருமானம் இருக்கும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. மே18க்கு பிறகு அவரால் கலகம், விரோதம் ஏற்படலாம். ஆனாலும் அவரது பார்வை பலத்தால் பிரச்னையை முறியடித்து வெற்றி காணலாம்.

குடும்பத்தில் மாத முற்பகுதியில் புதனால் பிரச்னை வரலாம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு ஏற்படலாம். இதற்கு காரணம் புதன் 7-ம் இடத்தில் இருப்பதே. ஆனால் மே28க்குப் பிறகு மனதில் அமைதி நிலவும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் சேரும். பெண்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர் குறிப்பாக மே19,20, ஜூன்15ல் அவர்களால் கூடுதல் நன்மை கிடைக்க பெறுவீர்கள். மே15,ஜூன் 11,12ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும்.

பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். மே28க்கு பிறகு புதனால் பதவி உயர்வு வந்து சேரும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். ஜூன்9,10ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகள் அடிக்கடி வெளியூர் பயணம் செல்வர். எதிரிகளால் பிரச்னை வரலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டியதிருக்கும்.

கேதுவால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே16,17,18,21,22,23, ஜூன்13,14ல் சந்திரனால் தடைகள் வரலாம்.

மே31, ஜூன்1ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். மே18க்கு பிறகு குருவின் பார்வையால் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜூன்3க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் ஏற்படலாம்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. மே29,30ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் குருவால் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு உதவும்.

மே28க்கு பிறகு கல்வியில் சிறப்படைவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு வருமானம் குறையாது. மஞ்சள், பாசிப்பயறு, கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும்.

பெண்கள்- வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். மே18க்கு பிறகு குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மே24,25ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். ஜூன்2,3,4 சிறப்பான நாட்களாக அமையும். கேதுவால் மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க
வேண்டும். உடல்நிலை சீராக இருக்கும். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும்.

* நல்ல நாள்: மே 15,19,20,24,25,31,ஜூன் 1,2,3,4,9,10,11,12
* கவன நாள்: ஜூன் 5,6 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,7
* நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்:
● தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு
● வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்

Advertisement
 
Advertisement