Advertisement

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) எதிர்பாராத வருமானம்

சூரியன் 3-ம் இடத்தில் நின்று குடும்பத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்வார். சுக்கிரன் ஜூன் 4ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். மேலும் புதன் மே 28க்கு பிறகு நற்பலன் கொடுப்பார்.

10-ம் இடத்தில் இணைந்திருக்கும் சனி, கேது, 4-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகுவால் நன்மை எதிர்பார்க்க முடியாது. தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அவரால் மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். சுக்கிரனால் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மே28க்கு பிறகு பொன், பொருள் சேரும். ஜூன்3க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின்9-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குறிப்பாக மே29,30ல் அவர்களால் அனுகூலம் காணலாம்.

மே24,25ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். மே28க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம்.
மே21,22,23ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். புதனால் ஏற்பட்ட பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு மே28க்கு பிறகு மறையும். விண்ணப்பித்த வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

கலைஞர்கள் உற்சாகமான பலனைக் காண்பர். சக கலைஞர்களின் மத்தியில் பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பரிசு போன்றவை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே விரும்பிய பதவி கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். மே18க்கு பிறகு சிலர் மேல் படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்வர். விவசாயிகள் பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவர். மே28க்கு பிறகு ஆடு, மாடு மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும். பால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்க விடாமுயற்சி தேவைப்படும்.

பெண்கள் வாழ்வில் குதூகலம் அதிகரிக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். ஜூன்2,3,4ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்க பெறலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம். மே15, ஜூன்11,12 சிறப்பான நாட்களாக அமையும். சகோதர வழியில் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே18க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

* நல்ல நாள்: மே 15,21,22,23,24,25,29,30, ஜூன் 2,3,4,9,10,11,12
* கவன நாள்: மே 16,17,18, ஜூன்13,14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:3,9
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
● ராகு காலத்தில் துர்க்கை, பைரவர் வழிபாடு
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை
● திங்கட்கிழமை சிவனுக்கு வில்வார்ச்சனை.

Advertisement
 
Advertisement