Advertisement

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ஆரோக்கியம்

பொருளாதார வளம் பெருகும் மாதமாக அமையும். சூரியன், சுக்கிரன், குரு மாதம் முழுவதும் நன்மை செய்வர். செவ்வாய் ஆக.10 வரை 3-ம் இடத்தில் இருப்பதால் பல்வேறு முன்னேற்றத்தைக் கொடுப்பார். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. சூரியனால் பணவரவு சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் சுக்கிரனால் தேவையான வசதிகள் கிடைக்கும். ஜூலை 24க்கு பிறகு மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்,மனைவி இடையே அன்பு பெருகும். ஜூலை27,28ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர். ஜூலை 22,23,24ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக.3,4 ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை31,ஆக.1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை முதலியன ஆக.2க்கு பிறகு மறையும்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நன்மையை எதிர்பார்க்கலாம். கோரிக்கைகளை ஆக.10க்குள் கேட்டுப் பெறவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கோரிக்கைகள் விடாமுயற்சியால் நிறைவேறும். இருப்பினும் சுக்கிரனால் அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஜூலை24க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். ஆக.2க்கு பிறகு அரசு ஊழியர்கள் கவனமுடன் செயல்படவும். ஜூலை 20,21,ஆக.16,17 சிறப்பான நாட்களாக அமையும்.

வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். மாதத் தொடக்கத்தில் வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். புதன் ஆக.3ல் கடகத்திற்கு மாறுகிறார்.
அப்போது பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.7,8ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்களின் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். ஆக.10க்கு பிறகு எதிர்பார்த்த பலனை பெற முடியாது.

விவசாயிகள் பழ வகைகள், மஞ்சள், கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் அதிக வருமானம் காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஆக.10க்குள் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு அமையும். மாணவர்கள் கல்வியில் சீரான பலனை காண்பர். குருவால் ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள் வாழ்வில் குதூகலமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து செயல்படவும். ஆக.9,10 சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

* நல்ல நாள்: ஜூலை 20, 21,22, 23, 24, 27,28, 31 ஆக.1, 2, 7, 8, 9, 10, 16, 17
* கவன நாள்: ஆக.11,12,13 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: சிவப்பு, மஞ்சள்

* பரிகாரம்:
● வெள்ளியன்று ராகுகால துர்கை வழிபாடு
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
● திங்கட்கிழமை சிவனுக்கு வில்வமாலை

Advertisement
 
Advertisement