Advertisement

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆடம்பர வசதி பெருகும்

குரு அக். 28 வரை நன்மை தருவார். புதன், சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் தருவர். அவர்களால் குடும்பத்தில் குதுாகலம் ஏற்படும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெண்களால் பணஉதவி கிடைக்கும்.

கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் இனி இருக்காது. ஆனால் அரசு வகையில் அனுகூலம் இல்லை. பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். அக். 28க்குள் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். செவ்வாயால் அலைச்சல், மனவேதனை ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரால் தொல்லை வரலாம்.

பெண்களின் பங்களிப்பு குடும்பத்தில் மேலோங்கும். கணவரின் விருப்பம் அறிந்து செயல்படுவர். சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் பதவி உயர்வு காண்பர்.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்களைப் பொறுத்தவரையில், பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை கொடுக்கும்.
வியாபாரத்தில் உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.
அரசு பணியாளர்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம்
தனியார் துறையில் பணியாளர்கள் புதன் பலத்தால் உயர்ந்த நிலையை எட்டிப் பிடிப்பர்.
ஐ.டி. துறையினர் வேலையில் திருப்தி காண்பர்.
வக்கீல்களுக்கு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆசிரியர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அரசியல்வாதிகள் தலைமையின் மத்தியில் செல்வாக்கு காண்பர்.
கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
விவசாயிகளுக்கு கீரைகள், காய்கறிகள், பாசிப்பயறு, சோளம், மஞ்சள் பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.
பள்ளி மாணவர்கள் புதனால் நல்ல வளர்ச்சி காண்பர். கல்லுாரி மாணவர்கள் மாத முற்பகுதியில் போட்டிகளில் வெற்றி பெறுவர்.

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்கள் சிலர் அரசு வகையில் பிரச்னையைச் சந்திக்கலாம். மறைமுக எதிரிகளால் இடையூறு குறுக்கிடலாம்.
வியாபாரிகள் விண்ணப்பித்த வங்கிக் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மருத்துவர்கள் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
ஆசிரியர்களுக்கு அக். 28க்கு பிறகு குருவால் பண நஷ்டம், மன சஞ்சலம் உருவாகலாம்.
அரசு பணியாளர்கள் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அலைச்சலால் உடல்நலக்குறைவுக்கு ஆளாவர்.
அரசியல்வாதிகள் பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள் புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும். கல்லூரி மாணவர்கள்
அக்.28க்கு பிறகு வீண் குழப்பத்திற்கு ஆளாகலாம்.

* நல்ல நாள்: அக்.18,24, 25,26,27,நவ.1,2,3,4,5, 8,9,10,13,14,15
* கவன நாள்: அக்.28, 29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,7
* நிறம்: வெள்ளை, பச்சை

* பரிகாரம்
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
● திங்கட்கிழமையில் சிவனுக்கு வில்வ மாலை
● சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்.

Advertisement
 
Advertisement