Load Image
Advertisement

தனுசு : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

மூலம்; லாபமோ லாபம்

கேது, குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2024 வருடத்தில் தொழில் லாபமோ லாபம் என பணம் கொழிக்கும். உடல்நிலை சீராகும். வேலை தேடியவர்களுக்கு வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். எதிரிகளை அடக்கும் ஆற்றல் உண்டாகும். சமூகத்தில் கவுரவம் அதிகரிக்கும். வீட்டில் சுபச்செலவு கூடும். சிலருக்கு பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும்.

சனி சஞ்சாரம்
சனி பகவான் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செயல்கள் யாவும் வெற்றியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். உடல்நிலை மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிரமங்கள் யாவும் நீங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இடம், பூமி, வாகனம் ஆகிய எண்ணம் பூர்த்தியாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும். கலைஞர்களுக்கு இக்காலம் யோகமான. காலமாக இருக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
சுக ஸ்தானமான 4ம் இடத்தில் ராகுவும், ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் சில சங்கடம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களை வழிநடத்தக் கூடியவர்களாக இருப்பீர்கள்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 5ம் இட குருவால் செல்வாக்கு உயரும். விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பணவரவு அதிகரிக்கும். குலதெய்வத்தின் அருளால் உங்கள் நிலை உயரும். சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மே1 முதல் 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வைகளால் செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

சூரிய சஞ்சாரம்
பிப்.13 - மார்ச் 13 மற்றும் மே 14 - ஜூன் 14 வரையிலும், செப்.17 - நவ.15 காலத்திலும் சூரிய பகவானின் 3,6,10,11 ம் இட சஞ்சாரம் அத்தனை சங்கடங்களையும் விலக்கி வைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். வியாபாரம், தொழிலில் இருந்த தடை நீங்கி லாபம் கிடைக்கும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்களை முடிவிற்கு கொண்டு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். நினைத்ததை சாதிக்கும் காலமாக இக்காலம் இருக்கும்.

பொதுப்பலன்
முன்பிருந்த நெருக்கடி, சங்கடம் இனி முழுமையாக விலக ஆரம்பிக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கும். இழப்பில் இருந்து கற்ற பாடங்களின் வழியாக திறம்பட செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

தொழில்
நஷ்டத்தில் இயங்கிய தொழில் இனி லாபத்தில் செல்லும். வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள், ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் லாபத்தை கொடுக்கும்.

பணியாளர்கள்
உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. சிரமப்பட்டு உழைத்தாலும் அதற்குரிய மரியாதை இல்லை என்று ஏங்கிய நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த பொறுப்பும், ஊதிய உயர்வும் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு யோகமான காலமாக இருக்கும்.

பெண்கள்
நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு, இனி யோகமான பலன் உண்டாகும். விருப்பப்படி செயல்பட்டு வாழ்க்கையை நடத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைப் பாராட்டுவர். புதிய சொத்து வாங்குதல், வாகனம் வாங்குதல் என்ற எண்ணம் நிறைவேறும். இழந்ததை மீட்கும் காலமாக இக்காலம் இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும்.

கல்வி
படிப்பிலிருந்த தேக்கநிலை மாறும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டு தேர்வில் வெற்றியடைவீர்கள்.

உடல்நிலை
ஏழரை சனியின் காலம் முடிந்து விட்டதால் இனி நோய்கள் உண்டானாலும் மருத்துவ சிகிச்சை மூலம் விடுதலை அடைவீர்கள்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாளாக தடைபட்ட சுபநிகழ்வுகள் நடந்தேறும். செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் சென்று குடும்பத்தை நடத்துவீர்கள். தடைபட்ட முயற்சிகள் இனி வெற்றியாகும். சிலர் புதிய வாகனம், புதிய வீடு என வாங்குவீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றில் அக்கறை கொள்வீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் வேண்டுதல் நிறைவேறும்.

பரிகாரம்
மயிலை கபாலீஸ்வரரை அர்ச்சனை செய்து வணங்க சங்கடங்கள் தீரும்.
பூராடம்; வெற்றி மீது வெற்றி

சுக்கிரன் மற்றும் குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, உங்கள் வாழ்வில் கடந்த சில ஆண்டுகளாக சிக்கல், போராட்டம் நிறைந்திருக்கும். இந்த நிலையில் 2024ல் உங்கள் வாழ்வின் திருப்புமுனை உண்டாகப் போகிறது. இத்தனை நாளும் இருந்த சங்கடங்களில் இருந்து முழுமையாக விடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். வெற்றி மீது வெற்றியை சந்திப்பீர்கள். பொருளாதார நிலையில் மேம்பாடு உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றமும் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை, துணிச்சல் அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். ஆதாயம் ஏற்படும். பணியில் இருந்த பிரச்னைகள் முழுமையாக முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். வெளிநாட்டு தொடர்புகளால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த செல்வாக்கு, அந்தஸ்து ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என உங்களை பிறர் பாராட்டும்படி இருக்கும்.

ராகு- கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும் கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டாகும். பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். செல்வாக்கு உயரும். சிலர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதியுதவி செய்வர். பெரியோரின் ஆசி உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், குலதெய்வ அருள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். தடைபட்ட சுபநிகழ்ச்சி நடைபெறும். பணவரவு அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மாறி தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மே 1 முதல் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் வாழ்க்கை பிரகாசிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களால் மதிக்கும் நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சூரிய சஞ்சாரம்
பிப்.13 - மார்ச் 13 மற்றும் மே 14 - ஜூன் 14 வரையிலும், செப்.17 - நவ.15 வரையிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும். இதுவரையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். பணியில் உண்டான பிரச்னைகள் மறையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். ஆரோக்கியம் உண்டாகும். துணிச்சலாக செயல்படுவீர்கள். எதிர்த்தவர்கள் விலகிச் செல்வர்.

பொதுப்பலன்
போராட்டம், பிரச்னைகள், நிம்மதியின்மை என்ற நிலை இனி மாறும். செயல்கள் யாவும் வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில், வியாபாரத்தில் தடைகள் விலகும். உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். கடந்தகால பிரச்னைகளை அலசி ஆராய்ந்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் அதிகரிக்கும். உழைப்பும் முயற்சியும் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். பொது வாழ்வில் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும்.

தொழில்
தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வளர்ச்சியைக் காண முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். இயந்திரத்தொழில், விவசாயம், கால்நடை, வாகன உற்பத்தி, வாகன விற்பனை, கலைத்துறை, அச்சுத்தொழில் செய்வோர் அதிக லாபம் காண்பர்.

பணியாளர்கள்
உங்கள் உழைப்பிற்கு இனி மரியாதை கிடைக்கும். வேலை நிரந்தரமாகும். ஊதிய உயர்வும் புதிய பொறுப்பும் உண்டாகும். முதலாளிகள் உங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.

பெண்கள்
குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். விரும்பிய பொருட்களை வாங்கும் நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சோர்வுற்ற மனம் இனி சுறுசுறுப்படையும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். வேலைத்தேடிபவர்களுக்கு வேலை அமையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுயதொழில் செய்வோரின் விருப்பம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் இருந்த சங்கடம் விலகி செல்வாக்கு தோன்றும். வாழ்க்கைத்துணை இல்லாதவர்களுக்கு மறுமணம் நடைபெறும்.

கல்வி
படிப்பில் ஆர்வம் உண்டாகும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் ஆசிரியர்களின் ஆலோசனையின்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

உடல்நிலை
பரம்பரை, மறைமுகநோய்களால் தொந்தரவு உண்டாகும் என்றாலும் சிகிச்சைக்கு கட்டுப்படும். விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்றவர்கள் இனி எழுந்து நடமாடுவர்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் இனி விலகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் மீது படிப்பு, வேலை, புதிய தொழில் தொடங்குதல், திருமணம் என கவலைப்பட்டு வந்தவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். தம்பதியருக்குள் இருந்த சங்கடம் விலகும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். கடுமையாக உழைத்து நினைத்ததை சாதிப்பீர்கள். உறவினரிடையே செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டைக் கட்டி குடியேறுவர்.

பரிகாரம்; சனிக்கிழமையன்று அனுமனை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.
உத்திராடம்; முயற்சி வெற்றி தரும்

சூரியபகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் 2024 ஆண்டு உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் இட சனி பகவானாலும், 5ம் இட குருபகவானாலும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். தொழிலில் முன்னேற்றம். வாழ்க்கையில் உண்டான சங்கடங்களில் இருந்து விடுதலை. நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் நிலை. சமுதாயத்தில் அந்தஸ்து, இழந்தவற்றை மீட்டெடுக்கும் ஆற்றல், குடும்பத்தில் சுபநிகழ்வுகள், சொத்து சேர்க்கை என ஆதாயப் பலன்களை வழங்கும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3 ம் இட ராகுவால் அதிர்ஷ்ட நிலை உண்டாகும் வெளிநாட்டு தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆதாயத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். சிலர் தொழிலை வளர்ச்சி செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். ஜென்ம சனி முடிந்திருப்பதால் சங்கடம் குறைய ஆரம்பிக்கும்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 16 - ஜூன் 19, நவ.4 - டிச.31 வரையிலும் அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும். சனிபகவானின் அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடம் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வாகனம் வாங்கும் முயற்சி, தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10ம் இட கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடம் ஏற்படுத்துவர். தொழிலில் தடைகள், வருமானத்தில் இழுபறியை உண்டாக்குவர். முயற்சிகளில் ஏமாற்றத்தை வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் தொழிலில் முன்னேற்றம், பணியில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவர். நன்மைகளை அதிகரிப்பர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்ளும் நிலையை ஏற்படுத்துவர். அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்துவர்.

குரு சஞ்சாரம்
உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வாழ்வில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, புதிய தொழில் முயற்சி. பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சமூக அந்தஸ்தை வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
பிப் 13 - மார்ச் 13, மே 14 - ஜூன் 14 வரையிலும் மற்றும் செப். 17 - நவ.15 வரையிலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும், மார்ச் 14 - ஏப். 13, ஜூன் 15 - ஜூலை 16 வரையிலும் மற்றும் அக்.18 - டிச.15 வரையிலும் 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சூரியனால் நன்மைகள் அதிகரிக்கும். வாழ்வில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். பிரச்னைகள் விலகும். நீண்டகால வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடலில் இருந்த பாதிப்பு நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். ஆற்றல் வெளிப்படும்.

பொதுப்பலன்
2024 ல் உங்களில் சிலருக்கு சனிபகவானும், குருபகவானும் சாதகமான நிலையில் உள்ளனர். சிலருக்கு ராகு பகவானும், மே1 முதல் குரு பகவானும் அதிர்ஷ்டத்தை வழங்குவர். வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பணியில் இருந்த பிரச்னை நீங்கும். வேலைத் தேடியவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் முடியும். பொன், பொருள், பூமி, வாகனச்சேர்க்கை உண்டாகும்.

தொழில்
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத்தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள், ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட் போன்றவை வளர்ச்சியடையும்.

பணியாளர்கள்
தனித்திறன் வெளிப்படும். வேலையில் முழுகவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டையும் பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவர். உங்கள் உழைப்பு மதிக்கப்படும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.

பெண்கள்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளி வட்டாரத்திலும், அலுவலகப் பணியிலும் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

கல்வி
படிப்பில் கவனம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.

உடல்நிலை
உடல் நிலையில் பிரச்னைகள் தோன்றும். உறக்கம், நிம்மதிக்கு சங்கடம் ஏற்படும். யோகா, தியானத்தால் தீர்வு உண்டாகும். சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சிகிச்சை, சரியான உணவு முறையால் நிவாரணம் கிடைக்கும்.

குடும்பம்
இதற்கு முன்பிருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீட்டில் குடியேறுதல் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்; திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர், பழநி முருகனை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement