Load Image
Advertisement

துலாம் : சித்திரை ராசி பலன்

சித்திரை 3,4 ம் பாதம்: தைரிய பராக்கிரம காரகனான செவ்வாய், அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எப்பொழுதும் எதிர்காலம் பற்றிய சிந்தனையே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகம் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு புதிய வழியினைக் காட்டப்போகிறது. சப்தம குருவின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் தொழில், உத்தியோகம் போன்றவற்றில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய வேலை அமையும் என்றாலும், மே 1 முதல் குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் செயல்களில் சங்கடங்கள் தோன்றலாம். அதே நேரத்தில் உங்கள் நட்சத்திரநாதன் ஏப். 22 முதல் ஆறாமிடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்ப்புகள் இல்லாத நிலை உருவாகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உங்கள் ராசிநாதன் மாதம் முழுவதும் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம். யாரையும் நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். அது சங்கடத்தில் முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். விருப்பங்கள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய நண்பர்களிடம் ரகசியங்களை சொல்ல வேண்டாம். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் மேற்படிப்பு பற்றிய சிந்தனை மே 7 க்கு பிறகு நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: மே 10,11

அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,18,24,27, மே 6,9
பரிகாரம்: கருமாரியம்மனை வழிபட்டால் குறையனைத்தும் தீரும்.

சுவாதி: அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், யோகக்காரகன் ராகுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகமாகவே இருக்கும். அதனால் உங்கள் வழி என்பது தனி வழியாக இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் நட்சத்திரநாதன் ராகு பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். எதையோ இழந்தது போல் நடமாடிய நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். செயல்கள் யாவும் வெற்றியாகும். உடலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். மாதத்தின் முற்பகுதியில் குருபகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம்: ஏப். 14, மே 11,12
அதிர்ஷ்ட நாள்: ஏப். 15,22,24, மே 4,6
பரிகாரம்: காளிகாம்பாளை தினமும் வழிபட்டால் வாழ்வு வளமாகும்.

விசாகம் 1,2,3 ம் பாதம்: தன, புத்திர, ஞானக்காரகனான குரு, அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றையும் கண்டறிந்து அதில் வெற்றி அடையும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். செல்வமும் செல்வாக்கும் உங்களை வந்து சேரும். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் நட்சத்திரநாதன் ஏப். 30 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிலையில் முன்னேற்றம் அளிப்பார். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாற்றமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். ராகு பகவான் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நீண்ட நாளாக தடைபட்ட முயற்சிகள் இப்போது வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இக்காலத்தில் பின்வாங்கி செல்வார்கள். அந்த அளவிற்கு உங்களுடைய செல்வாக்கு உயரும். பொருளாதாரம் மேம்படும். வியாபாரம், தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். மே 7 முதல் புத பகவானின் சஞ்சார நிலையால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். விவசாயிகள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் எண்ணம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஏப். 15, மே 12,13.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 21,24,30, மே, 3,6.
பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டால் குறையனைத்தும் விலகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement