சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு; ஏப்.21 முதல் 4 நாட்கள் அனுமதி



வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை ஏப்ரல் 21 முதல் 24 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை ஏப்ரல் 21 சித்திரை மாத பிரதோஷமும், 23ல் சித்ரா பவுர்ணமி வழிபாடும் நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை ஏப்ரல் 21 காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மலைப்பகுதி வறண்டு காணப்படுவதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்