திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழா



தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.  இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து 18ம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல், ஆறு ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த 22ம் தேதி தேரோட்டம் நடந்தது.

அதை தொடர்ந்து இன்று(25ம் தேதி) முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா, ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.  சப்தஸ்தானம் திருவையாறில் இருந்து புறப்பட்டு, திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர் வழியாக இரவு காவிரி ஆற்றில், ஆறு ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி  ஆற்றில் வானவேடிக்கை நடைபெறுகிறது. நாளை 26ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆறு ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாரதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன 27வது  குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்