திருமுருகன்பூண்டியில் நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு



அவிநாசி: சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, அவிநாசி, சேவூர், திருமுருகன்பூண்டியிலுள்ள சிவாலயங்களில், சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீநடராஜபெருமானுக்கு மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சித்திரையில் திருவோணம், ஆனியில்உத்திரம், மார்கழியில் திருவாதிரை ஆகியநட்சத்திர நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி உள்ளிட்ட மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதிகளிலும், ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மஹாஅபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், நேற்று சித்திரை திருவோண நட்சத்திரம் என்பதால், மஹாஅபிேஷ கம் நடராஜபெருமானுக்கு செய்விக்கப்பட்டது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வர சுவாமி கோவில், திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதசுவாமி கோவில் உட்பட சிவாலயங்களில், சிவகாமி அம்மன் சமேத ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே நடைபெறும் மஹா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிவனடியார்கள் சிவபுராணம், தேவாரம் பாராயணம் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்