கருப்பராயசுவாமி கோவில் பொங்கல் விழா கோலாகலம்



அனுப்பர்பாளையம்; திருப்பூர், அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம்புதுாரில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீ கருப்பராயசுவாமி, ஸ்ரீகன்னிமார் சுவாமி கோவில்களில், பொங்கல் விழா கடந்த, 24ம் தேதி முதல் துவங்கி நடை பெற்று வருகிறது. விழாவையொட்டி , நேற்று காலை 6:00 மணி முதல் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4:00 மணிக்கு ஸ்ரீ கருப்பராயசுவாமி, மேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், இன்று மஞ்சள் நீராட் டு விழா , இரவு 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடை பெறுகிறது. பொங்கல் விழா ஏற்பாடுகளை கோவில் விழா க மிட்டியினர் செய்து வருகின்றனர்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்