திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சுவாமியை மறைக்கும் கேட் திறந்து வைக்க கோரிக்கை



திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள சில சன்னிதிகளில், அவ்வப்போது பாதுகாப்பு கேட் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், சுவாமியின் முகம் முழுமையாக தெரியாமல் மறைக்கப்படுகிறது. வழிபடும் பக்தர்கள் திருப்தி இல்லாமல் வழிபட்டு செல்கின்றனர். எனவே , சுவாமி முகம் மறைக்காத வகையில், பாதுகாப்பு கேட்டை திறந்து வைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். – கே .விஜயன், திருப்போரூர்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்