திருப்பரங்குன்றம் கோயிலில் விசாக வசந்த உற்ஸவ விழா மே 13ல் துவக்கம்



திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது. அன்று உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை முடித்து காப்பு கட்டப்படும். இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தின் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சி மே 21வரை நடக்கும். விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு மே 22 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுள்வர். திருப்பரங்குன்றம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக தலையில் சுமந்து வரும் பால்குடங்களில் இருக்கும் பால் சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படும். மே 23 காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசில் எழுந்தருளுவர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்