மொட்டை அடிக்க ரூ.250 கட்டணம் வசூலால் பக்தர்கள் அதிர்ச்சி



ப.வேலுார்; அறநிலையத்துறைக்குட்பட்ட மாரியம்மன் கோவிலில் மொட்டை அடிக்க, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் புது மாரியம்மன் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு சித்திரை திருவிழா கடந்த ஏப்., 22ல் தொடங்கியது. அங்கு நேற்று பக்தர்கள் மொட்டை அடித்து, அலகு குத்தி, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது மொட்டை அடிக்க, பக்தர்களிடம், 150 ரூபாய் பெற்றுக்கொண்டு, ‘டோக்கன்’ வழங்கினர். மேலும் மொட்டை அடிக்கும் இடத்தில், தொழிலாளர்கள், 100 ரூபாய் வசூலித்தனர். இதுமட்டுமின்றி ஆடு, கோழி பலி கொடுக்க, 50 ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இதுதவிர கோவில் ஏற்கனவே, அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே தனி நபர்களால் தற்போது சில்வர் உண்டியல் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் காணிக்கை வசூலிக்கப்பட்டது. செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் கூறுகையில், ‘‘அறநிலையத்துறை கோவில்களில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. தனிப்பட்ட முறையில் உண்டியல் வைக்கவோ, நன்கொடை வசூலிக்கவோ உரிமை இல்லை. இதுகுறித்து விசாரித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்