திருப்புவனத்தில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை



திருப்புவனம்; திருப்புவனத்தில் மழை வேண்டி தவ்ஹீத் ஜமா அத் சார்பில் இன்று சிறப்பு நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக கண்மாய், ஊரணி வறண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வைகை ஆற்றங்கரையோரம் உள்ள திருப்புவனம் நகரில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. மழை வேண்டி பல்வேறு தரப்பினரும் வேண்டுதல்கள் நிறைவேற்றி வரும் நிலையில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் திருப்புவனம் புதூரில் இன்று காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை சிறப்பு தொழுகை கிளைத்தலைவர் தீன் முகமது தலைமையில் நடந்தது. மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். இயற்கையை அவரவர் விரும்பும் வகையில் வேண்டி மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சனை தீரவும் இந்த சிறப்பு தொழுகை நடந்ததாக தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்