கொடையில் ஈஸ்வரம்மா தினம்; வஸ்திரதானம்



கொடைக்கானல், கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சாய் ஸ்ருதியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் தெய்வத்தாய் ஈஸ்வரம்மா நினைவு தினம் விழா நடந்தது. டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், டாப்பே குழுமத் தலைவர் மல்லிகா சீனிவாசன் கலந்து கொண்டனர். விழாவில் நாராயண சேவை மற்றும் வஸ்திரதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஸ்ரீ சத்யசாய் சேவை நிறுவன தமிழ்நாடு தெற்கு மாநில தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் விஜய்கிருஷ்ணா செய்திருந்தனர். நிகழ்ச்சி சேவைகளை கொடைக்கானல் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி உறுப்பினர்கள் ஈடுபட்டனர். ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வஸ்திரதானத்தை பெற்றுச் சென்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்