கோவை; நேரு ஸ்டேடியம் ஆடிஸ்விதி வேதபுரீஸ்வரர் கோயிலில் சித்திரை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமை, மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் தீப ஒளியில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.