சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா



சிவகாசி; சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா நடந்தது.

சிவகாசி பத்ரகாளியம்மமன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் , வாகனம், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம் , வேதாள வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்நிலையில் இன்று கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலை 5:00 மணி அளவில் குதிரை வாகனத்தில் அம்மன் வேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாளை கயர்குத்து திருவிழா நடைபெறும்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்