கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா லட்சார்ச்சனை, சிறப்பு பூஜை



உடுமலை; கொழுமம் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கொழுமம் பிராமணாள் சமூக அறக்கட்டளை சார்பில், ஏக தின லட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை அருகே கொழுமத்தில், பிரசித்தி பெற்ற கோட்டைமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, கொழுமம் பிராமணாள் சமூக அறக்கட்டளை சார்பில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. கடந்த 4ம் தேதி கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து திவ்ய நாம பஜனை நடந்தது. கடந்த 5ம் தேதி சீர் அழைப் பு, சீதா கல்யாண உற்சவம், விஷ்ணு ச கஸ்ரநாமபாராயணம் நடை பெற்றது. மேலும், ஏகதின லட்சார்ச்சனை , திருவிளக்கு பூஜைக்குப்பிறகு நேற்று, திருமஞ்சனம் புறப்பாடு மற்றும் சாட்டு திறப்பு நடந்தது. இன்று, (8ம் தேதி) காலை , 7:30 மணிக்கு, ஸ்ரீதே வி, பூதேவி சமேத கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம், 11:30 ம ணிக்கு, அறக்கட்டளை சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்