மேல்மருவத்துார் ஆதிபரா சக்தி சித்தர் பீடத்தில் சித்திரை அமாவாசை வேள்வி



மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்தரை மாத அமாவாசையையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன், வெள்ளிகாப்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

சித்தர் பீடம் வந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளாரை வணங்கி, சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில், சிறப்பு வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதன்பின், நீண்ட வரிசையில் வந்த செவ்வாடை பக்தர்கள், யாக குண்டத்தில், சமத்து குச்சி, நவதானியம் உள்ளிட்ட பொருட்களை போட்டு, சுவாமியை வணங்கினர். தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு, அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்