காரைக்கால்; காரைக்கால் மேலகாசாகுடி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மஹோத்ஸ்வ பூஜையை முன்னிட்டு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாகுடி பகுதியில் உள்ள ஸ்ரீமல்லிகேஸ்வரி மாரியம்மன், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் மஹோத்ஸவப் பூஜையை முன்னிட்டு நேற்று ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு பூச்சொரிதல். காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெண்கள் நாகநாதன்சுவாமி ஆலயத்திலிருந்து பூங்கள் கொண்டு வந்து பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 21ம் தேதி காவடி எடுத்தல். கும்பபூஜை, அக்னி கப்பறை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 22ம் தேதி காளியம்மன் வீதியுலா, 28ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் தலைமையில் விழாகமிட்டி மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.