மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோயில் திருமால்பூஜை



ஏரல்; மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோயில் திருமால் பூஜை கோலாகலமாக நடந்தது. மாவடிப்பண்ணை 18 பங்கு நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு திருமால் பூஜை நடந்தது. விழா நிகழ்ச்சியாக அன்று காலை 8 மணிக்கு செண்டை மேள வாத்தியங்களுடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து அலங்காரத்துடன் மதிய கொடை நடந்தது. இரவு 7 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேமிசம் கொண்டு வருதல், கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார பூஜை, வாணவேடிக்கையை தொடர்ந்து அம்மன் பொன் சப்பரத்தில் நகர் உலா சென்ற நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடந்தது. விழாவில் சென்னை, கோவை, மும்பை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று இரவு ஒன்பது மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை 18 பங்கு நாடார் சமுதாய பொதுமக்கள் செய்திருந்தனர்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்