திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல்வலசையில் காந்தாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதணைகள் நடந்தது. நேற்று இரவில் அக்கினி சட்டி ஊர்வலம் நடந்தது. இன்று சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமானோர் மேளதாளங்கள் முழங்க சென்றனர். கோயில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* வண்ணாங்குண்டு ஊராட்சி செல்வனூரில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. செல்வனூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று சிறப்பு பூஜைக்கு பின்பு நேர்த்திக்கடன் பக்தர்களால் அக்னிசட்டி, வேல் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து வந்தனர். இன்று காலையில் சிறப்பு தீபாராதனை நடந்தது. மலர்களால் மூலவர் முத்துமாரி அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செல்வனுர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.