நெய்க்காரப்பட்டி; பழநி நெய்க்காரப்பட்டி, பெரிய கலையம்புத்தூர் ஹை கோர்ட் பத்திரகாளியம்மன் கோயில் வைகாசி விழாவில் தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி, நெய்க்காரப்பட்டி, பெரிய கலையம்புத்தூர் நடுத்தெருவில் உள்ள ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 23, கொடிமரம் நடுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. மே 27,ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல், முகூர்த்தக்கால் நடுதல், சாமி சாட்டுதல் நடைபெற்றது. ஜூன் 2, அன்று ரத ஊர்வலம், பால் குட ஊர்வலம் நடைபெற்றது. ஜூன் 3, பூ குண்டம் வளர்த்தல் மாலை ஆறு மணிக்கு துவங்கியது. அதன் பின் வானவேடிக்கை நடைபெற்றது. இன்று ஜூன் 4, அதிகாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குண்டம் இறங்குதல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதன் பின் கிடா வெட்டுதல், பூச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். நாளை ஜூன் 5 மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.