பெரியபட்டினம்; பெரியபட்டினத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த ஜூன் 4 அன்று அனுக்கை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, லட்சுமி பூஜைக்கு பிறகு காலை 11:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி, குருநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் கமுதக்குடி பாரதிராஜ் சிவாச்சாரியார் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.